மாணவர்களுக்கான வழிமுறைகள்
* மாணவர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பில் பங்கேற்க வேண்டும்.
* வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது, மாணவர்கள் அவர்களுக்குரிய கணினி மென்பொருள்கள் மற்றும் இணைய இணைப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்படின் முதலில் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்கவும்.
* உங்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோர் உடன் இயன்ற வரையில் தமிழில் பேசிப் பழகவும்.
* வீட்டுப் பாடங்களை பெற்றோர் துணையுடன் உரிய நேரத்தில் செய்து முடிக்கவும்.
* உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக ஆசிரியரிடம் தெரிவித்து தெளிவுப் படுத்திக் கொள்ளவும்.